மட்டக்களப்பில் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ள விசேட பொலிஸ் குழுக்கள்

250 0

மட்டக்களப்பு மாவட்டத்தில் பயணக் கட்டுப்பாட்டினை மீறி செயற்படுவோரை கண்டறியும் சோதனை நடவடிக்கை, விசேட பொலிஸ் குழுக்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பிலுள்ள பல்வேறு பகுதிகளிலும் இந்த சோதனை நடவடிக்கையினை பொலிஸ் குழுக்கள் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுத்திருந்தன.

மட்டக்களப்பு, கல்லடி பாலம், அரசடி சந்தி, ஊரணி சந்தி ஆகிய பகுதிகளில் வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்டு, விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மேலும் மட்டக்களப்புக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மற்றும் அத்தியாவசிய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் ஆகியோரின்  பாஸ் மற்றும்  அனுமதிப்பத்திரங்கள் பரிசோதிக்கப்பட்டன.

இதன்போது பயணத்தடையை மீறி அநாவசியமா நடமாடியவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், சிலர் கடுமையாக எச்சரிக்கப்பட்டு திருப்பியனுப்பி வைக்கப்பட்டனர்.