யாழில் மேலும் இருவர் கொவிட் தொற்றால் மரணம்

268 0

யாழ்ப்பாணத்தில் கொவிட் -19 தொற்றால் இரண்டு நாட்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என்று யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை கொக்குவிலைச் சேர்ந்த 85 வயதுடைய ஒருவர் கொவிட்-19 சிகிச்சை பிரிவில் உயிரிழந்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை அளவெட்டியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.