மட்டக்களப்பில் ஒரேநாளில் கொரோனாவால் 5 பேர் உயிரிழப்பு, 95 பேருக்கு கொரோனா– பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்

290 0
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மட்டும் ஒரோநாளில் கொரோனா தொற்றில் இளம் கர்ப்பிணி பெண் ஒருவர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் 41 அதிகரித்துள்ளதுடன் கொரோனா தொற்று 95 பேருக்கு உறுதி கண்டறியப்பட்டுள்ளதாக இன்று ஞாயிற்றுக்கிழமை (06) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

கொரோனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்து ஏறாவூரைச்சேர்ந்த 58 மற்றும் 68 வயதுடைய இரு பெண்களும், வயதுடைய பெண் ஒருவரும், வாழைச்சேனையை சேர்ந்த 36 வயதுடைய கர்ப்பிணி பெண் ஒருவரும், மட்டக்களப்பு நகர் பகுதியைச் சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவரும் வாழைச்சேனை பிறைந்துரைச்சேனையை சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஒருவர் உட்பட 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 பேரும், களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேரும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேரும், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16 பேரும், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேரும் செங்கலடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேரும்,ஏறாவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், பட்டிப்பளை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 பேரும், வவுணதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேரும், வெல்லவெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேரும், கிரான் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 பேர் உட்பட 95 பேருக்கு தொற்று இன்று கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.