திருப்பழுகாமம் வைத்தியசாலைக்கு சிகிச்சைப் பெறவந்த 2 பேருக்கு கொரோனா

207 0

மட்டக்களப்பு- திருப்பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு சிகிச்சைப் பெறவந்த 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) பெரியபோரதீவிலிருந்து சுகவீனம் காரணமாக திருப்பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு சிகிச்சைப் பெற வந்தவர்களுக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து போரதீவுப்பற்று பிரதேசசபையும் வெல்லாவெளி சுகாதார திணைக்களமும் இணைந்து வைத்தியசாலையில் தொற்று நீக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தன.