வவுனியாவிலுள்ள குளமொன்றிற்கு மீன் பிடிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

265 0

வவுனியா- மருக்காரம்பளை, அரசன் குளத்திற்கு மீன் பிடிக்கச் சென்ற 16 வயது சிறுவன்,  நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் மருக்காரம்பளையை சேர்ந்த ஜெயக்குமார் அரசபண்டார என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.

அரசன் குளத்திற்கு நண்பர்களுடன் மீன் பிடிக்கச் சென்று,  நீந்தியபோதே சிறுவன் மூழ்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம், வவுனியா பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக  வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்.