கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு

229 0

கிளிநொச்சி தருமபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமாரசாமிபுரம் கிராமத்தில் இன்று வீட்டு கிணற்றிலிருந்து வயோதிப பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடுப்பகுதியில் கண்டாவளைப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த நிலையில் நோய்வாய்ப்பட்டிருந்த குறித்த பெண் தனிமையில் வசித்துவந்த நிலையில் இன்று ; பிற்பகல் 2.30 மணியளவில் கிணற்றில் ; சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வேலாயுதம் பரமேஸ்வரி வயது 74 ;என்பவரே குறித்த ; கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தவறிவீழ்ந்தாரா? அல்லது தற்கொலையா? கொலையா? என்ற கோணத்தில் தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.