ஹாலிஎல பொலிஸ் நிலையத்தின் 12 பொலிஸாருக்கு கொரோனா

268 0

பதுளை, ஹாலி எல பொலிஸ் நிலையத்தின் 12 பொலிஸார் கொவிட்-19 தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட பொலிஸார் தியத்தலாவயிலுள்ள கஹகொல்ல மற்றும் பிந்துனுவெவ கொரோனா தடுப்பு சிகிச்சை நிலையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை பொலிஸ் நிலையத்தின் ஏனைய 18 அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 5 பொலிஸ் சார்ஜன்ட்கள், 5 பொலிஸ் கான்ஸ்டபிள்கள், பொலிஸ் சாரதி(கான்ஸ்டபிள்), ஒரு பெண் கான்ஸ்டபிள் ஆகியோர் அடங்குகின்றனர்.