தளர்வில்லா முழு ஊரடங்கில் போலீசார் தீவிர கண்காணிப்பு

222 0

தமிழகம் முழுவதும், 2-ம் கட்டமாக அமல்படுத்தப்பட்டிருக்கும் தளர்வில்லா முழு ஊரடங்கில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். வாகன தணிக்கையிலும் மும்முரம் காட்டி வருகிறார்கள்.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தளர்வில்லா முழு ஊரடங்கு கடந்த 24-ந்தேதி அமல்படுத்தப்பட்டது. இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, தளர்வில்லா முழு ஊரடங்கு 2-ம் கட்டமாக நேற்று முதல் நீடிக்கப்பட்டு இருக்கிறது.
ஊரடங்கு நடைமுறைகளின்படி, தமிழகம் முழுவதும் காய்கறி-மளிகை என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கின்றன. பொதுமக்கள் வசதிக்காக காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் நடமாடும் வாகனங்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தளர்வில்லா முழு ஊரடங்கு கடந்த 24-ந்தேதி அமல்படுத்தப்பட்டது. இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, தளர்வில்லா முழு ஊரடங்கு 2-ம் கட்டமாக நேற்று முதல் நீடிக்கப்பட்டு இருக்கிறது.
ஊரடங்கு நடைமுறைகளின்படி, தமிழகம் முழுவதும் காய்கறி-மளிகை என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கின்றன. பொதுமக்கள் வசதிக்காக காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் நடமாடும் வாகனங்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.