தமிழகம் முழுவதும், 2-ம் கட்டமாக அமல்படுத்தப்பட்டிருக்கும் தளர்வில்லா முழு ஊரடங்கில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். வாகன தணிக்கையிலும் மும்முரம் காட்டி வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தளர்வில்லா முழு ஊரடங்கு கடந்த 24-ந்தேதி அமல்படுத்தப்பட்டது. இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, தளர்வில்லா முழு ஊரடங்கு 2-ம் கட்டமாக நேற்று முதல் நீடிக்கப்பட்டு இருக்கிறது.
ஊரடங்கு நடைமுறைகளின்படி, தமிழகம் முழுவதும் காய்கறி-மளிகை என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கின்றன. பொதுமக்கள் வசதிக்காக காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் நடமாடும் வாகனங்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.