இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்

227 0

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரை விடுவிக்க 2,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நுரைச்சோலை பொலிஸ் காவலரணில் கடமையிலிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹன இதனை தெரிவித்தார்.