ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் காவு கொள்ளப்பட்ட உறவுகளின் 12ம் ஆண்டு வணக்க நிகழ்வு. – தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி

407 0

k1024_tsunami-flyer-2016தமிழர் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு சோக நாள் 26.12.2004 ஆகும். சுமத்திரா தீவுப்பகுதியில் கடலின் ஆழத்தில் நடந்த பாரிய நிலநடுக்கத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட பேரலைகள் இந்துசமுத்திரத்தில் பல நாடுகளில் மிகப் பெரிய அழிவுகளை ஏற்படுத்தியது. தமிழீழம், இலங்கை, இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகளே பாரிய அழிவுகளை சந்தித்தது. குறிப்பாக தமிழீழ கரையோர மாவட்டங்களும் இந்தியாவின் தமிழர் வாழ் பிரதேசங்களுமே பாதிக்கப்பட்டது.

இவ் அனர்த்தத்தில் காவு கொல்லப்பட்ட உறவுகளுக்கான வணக்க நிகழ்வு யேர்மனியில் எசன்( Südwest-Friedhof, Fulerumer Str. 15B, 45149 Essen) நகரில் அமையபெற்றுள்ள நினைவுத்தூபியில், எதிர்வரும் 26.12.2016 அன்று பிற்பகல் 16:30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அனைத்து உறவுகளையும் கலந்து கொள்ளுமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

k1024_tsunami-flyer-2016