நுவரெலியாவில் 9 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன

250 0

நுவரெலியாவில் 9 கிராம சேவகர் பிரிவுகள், இன்று (திங்கட்கிழமை) காலை முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த பகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனை முடிவில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே இப்பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதாவது பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டியாகல, பொகவந்தலாவ, கெகர்ஸ்வோல்ட், பொகவான, லொய்னோன் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் நோர்வூட் பிரிவுக்கு உட்பட்ட வெஞ்சர், இன்ஜஸ்ட்ரி, டிலரி ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் ஹற்றன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட என்பீல்ட் கிராம சேவகர் பிரிவும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதனால் குறித்த பகுதிக்குள் உட் பிரவேசிக்கவும் அங்கிருந்து வெளியேறுவதும் தடை செய்யப்பட்டுள்ளதுடன் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.