தலைமை செயலாளர் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் – விஜயதாரணி

338 0

201612221106187022_chief-secretary-to-resign-immediately-vijayadharani_secvpfதலைமை செயலாளர் பதவியில் இருந்து ராமமோகன ராவ் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என விஜயதாரணி எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

குமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலூரில் காங்கிரஸ் சட்டமன்ற கொறடா விஜயதாரணி  எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் வீட்டில் வருமானவரி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்து லட்சக்கணக்கான பணமும், தங்கங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தலைமை செயலகத்திலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றிலேயே தலைமை செயலகத்தில் சோதனை நடந்திருப்பது வெட்கக்கேடான வி‌ஷயமாகும். தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் இதில் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். தலைமை செயலாளர் பதவியில் இருந்து ராமமோகன ராவ் உடனே ராஜினாமா செய்ய வேண்டும்.

தற்போது தமிழக அரசை, மத்திய அரசு அடக்கு முறையில் இயக்குகிறதா? என்ற சந்தேகம் உள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் மர்மமாக உள்ளது. 75 நாட் களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதற்கான வீடியோ ஆதாரங்களை வெளியிட வேண்டும். மக்கள் மத்தியில் ஜெயலலிதா மரணம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதைப்போக்குவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.