பிரதேச செயலகத்தினால் எந்தவிதமான உதவிகளும் வழங்கப்படவில்லை

280 0

முல்லைத்தீவு மாந்தை கிழக்கின் கொல்லவிளாங்குளம் கிராம அலுவலர் பிரிவில் ஐந்து குடும்பங்கள் கொரோனாத் தொற்றுக்காரணமாக  கடந்த பன்னிரண்டு நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில்  பிரதேச செயலகத்தினால் எந்தவிதமான உதவிகளும் வழங்கப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தெரிவிக்கின்றன

இவ் விடயம்  குறித்துக் கருத்துத் தெரிவித்த மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் ந.ரஞ்சனா ”தனிமைப்படுத்தப்படும் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் பொறிமுறை பிரதேச செயலகத்திடம் இல்லை.

உதவி அமைப்புகள் வழங்குகின்ற உதவிகளை தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியும். அதற்கான விபரங்களை கிராம அலுவலர்களிடம் கூட சுகாதாரத் தரப்பினர் வழங்கவில்லை எனத் தெரிவித்தார்.