செட்டிகுளம் பிரதேச சபையின் சந்தை தொகுதிக்கான கேள்வி கோரலை பிரதேசத்திற்குள் கோருங்கள் செட்டிகுளம் மக்கள் ஆர்ப்பாட்டம்(காணொளி)

329 0

chetti-kulam-prostedவவுனியா செட்டிகுளம் பிரதேசசபையினரால்  நெல்சிப் திட்டத்தில் அமைக்கப்பட்ட சந்தை கட்டிடத்தொகுதியை வாடகைக்கு விடுவதற்கான கேள்வி கோரலை மாவட்ட ரீதியில் கோராது செட்டிகுளம் பிரதேசத்தில் கோரவேண்டும் என தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிதாக அமைக்கப்பட்ட சந்தை கட்டிடத்தொகுதி வளாகத்தில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளுர் வியாபாரிகளின் வயிற்றில் அடிக்காதே, உள்ளுர் பொருளாதாரத்தை அதிகரி, செட்டிகுளம் பிரதேச அதிகாரிகளே செட்டிகுளம் மக்களின் பொருளாதாரத்தில் கவனம் செலுத்து போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வட மாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியேக செயலாளர்  ப. சத்தியசீலன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியதுடன் இது தொடர்பாக வட மாகாண முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லபபடம்  என கொடுத்த உறுதிமொழியை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதுடன் பிரதேச சபையின் செயலாளரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.