இஞ்சஸ்டி கிராம சேவகர் பகுதி மறுஅறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளது

351 0

பொகவந்தலாவை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட  இஞ்சஸ்டி கிராம சேவகர் பகுதி மறுஅறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளது.

புளியாவத்தை பகுதியிலுள்ள தொழிற்சாலையொன்றில் பணியாற்றும்  180 பேருக்கு கடந்த 29 ஆம் திகதி மேற்கொண்ட   பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை இன்று (3) கிடைக்கப்பெற்ற நிலையில், 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக பொது சுகாதார பரிசோதகர்  தெரிவித்தார்.

இஞ்சஸ்டி தோட்டத்தில் 19 பேருக்கும் புளியாத்தை நகரில் 5 பேருக்கும் போடைஸ் தோட்டத்தில் 07  பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

இதனையடுத்து இஞ்சஸ்டி 319 எல்  கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட இஞ்சஸ்டி மேல் பிரிவு, இஞ்சஸ்டி கீழ் பிரிவு, பிளிங்கிபோனி, அபகனி, ஹென்சி, பீரட், பாத்போட், பிளிங்கிபோனி கடைதெரு மற்றும் புளியாவத்தை நகரமும் முற்றாக முடக்கப்பட்டுள்ளது.

இதேவேளை , என்பீல்ட் 319ஐ கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட போடைஸ் தோட்டத்துக்கு செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதர பரிசோதகர்கள் தெரிவித்தனர்.