அமீரகத்தில் ஒரே நாளில் 2,080 பேருக்கு கொரோனா

246 0

அமீரகத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 8 ஆயிரத்து 925 ஆக உயர்ந்தது.

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 12 ஆயிரத்து 779 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 2,080 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 8 ஆயிரத்து 925 ஆக உயர்ந்தது.
இதில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,793 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக தற்போது அமீரகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 90 ஆயிரத்து 457 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்தனர். இதனால் அமீரகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,569 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 16 ஆயிரத்து 889 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.