பொலிகண்டியில் விடுதலைப் புலிகளின் தயாரிப்பிலான வெடிபொருட்கள் மீட்பு

298 0

யாழ்ப்பாணம்- பொலிகண்டியில் விடுதலைப் புலிகளின் தயாரிப்பிலான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிகண்டி- புதுவளவு என்ற பகுதியிலேயே இந்த வெடிபொருட்களை, இன்று (சனிக்கிழமை) மீட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த வெடிபொருட்களை செயலிழக்க செய்வதற்கான தொழில்நுட்பத் திறன் தொடர்பில் கண்டறியப்படவில்லை எனவும் சம்பவம் தொடர்பாக சிறப்பு அதிரடிப்படையின் உயர்மட்டப் பிரிவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது எனவும் வல்வெட்டித்துறை பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் சிறப்பு அதிரடிப்படையின் வருகைக்காக தற்போது காத்திருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.