இங்கிலாந்து நாட்டில் பாலியல் பலாத்கார வழக்கில் 101 வயது முதியவருக்கு 13 ஆண்டு ஜெயில்

241 0

201612200319558419_paedophile-aged-101-starts-13-year-prison-sentence-for_secvpfஇங்கிலாந்து நாட்டில் பாலியல் பலாத்கார வழக்கில் 101 வயது முதியவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இங்கிலாந்து நாட்டில் பாலியல் பலாத்கார வழக்கில் 101 வயது முதியவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.தண்டனை பெற்றவரின் பெயர் ரால்ப் கிளார்க். இவர் முன்பு லாரி டிரைவராக இருந்த போது 1970-ம் ஆண்டு வாக்கில் சகோதரிகளான 4 வயது மற்றும் 13 வயது சிறுமிகள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவர்களுடைய சகோதரனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தனது 100-வது பிறந்த நாளை கொண்டாடிய ரால்ப் கிளார்க், அந்த புகைப்படத்தை ‘பேஸ்புக்’ பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

அதைப்பார்த்த, அவரால் பாதிக்கப்பட்ட அந்த இரு பெண்களும் (பாதிக்கப்பட்ட சிறுமிகள்) போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் ரால்ப் கிளார்க்கை கைது செய்து பிர்மிங்காம் கிரவுண் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு அவரை குற்றவாளி என்று கடந்த வாரம் தீர்ப்பு கூறியது. வயதை காரணம் காட்டி அவருக்கான தண்டனையை குறைக்கக்கூடாது என்று அரசு வக்கீல் வாதிட்டார்.

இந்த நிலையில், ரால்ப் கிளார்க்குக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து, நேற்று அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.இங்கிலாந்திலேயே சிறை தண்டனை பெற்ற அதிக வயதான குற்றவாளி இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.