‘நடிகர் விவேக்’ நினைவாக கிளிநொச்சியில் 10ஆயிரம் மரக்கன்றுகளை நடும் பணி ஆரம்பம்

254 0

மறைந்த நடிகரும் சமூகப் பற்றாளருமான விவேக் நினைவாக கிளிநொச்சி மாவட்டத்தில் 10 ஆயிரம் மரக் கன்றுகளை நடும் பணியை அகில இலங்கை தமிழ் இளைஞர் பேரவை முன்னெடுத்துள்ளது.

 
இதன் முதற்கட்டமாக பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்கள், இளைஞர் தொழிற் பயிற்சி மையங்கள், பொலிஸ் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் 200இற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடுகைக்காக வழங்கப்பட்டன.

எதிர்வரும் நாட்களில் மீதமுள்ள மரக்கன்றுகள் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் நடுகை செய்யப்படும் என்றுதெரிவிக்கப்பட்டது.