மண்டூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரு விபத்துக்களில் ஒருவர் உயிரிழப்பு!

253 0

வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரு விபத்துக்களில் ஒருவர் படுகாயம் மற்றுமொருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் தனது வயல் வேலையினை முடித்துவிட்டு தனது வயலகு;க தெளிப்பதற்கு கிருமிநாசினி வாங்கச்சென்றபோது (64) வதுடைய கந்தையா-நடராசா என்பவர் மண்டூர் பிரதான வீதியில் வீதியினை குறுக்கிட்ட மாட்டில் மோதியதில் படுகாயம் அடைந்த நிலையில் மண்டூர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (புதன்கிழமை) உயிரிழந்துள்ளர்.

அதேதினத்தில் வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் தனது அலுவலக கடமையினை முடித்துவிட்டு தனது வீடு திரும்பிய பெண் ஒருவர் வீதியினை குறுகிட்ட பாம்பினை கண்டு தனது மோட்டார் சைக்கிளை மறுதிசையில் திருப்பியபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயம் அடைந்த நிலையில் மண்டூர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிளை-தவக்குமார். சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.

மட்டக்களப்பு படுவான்கரை பிரதேசங்களில் அதிகமான கட்டக்காலி மாடுகள் வீதியில் இரவுவேளைகளில் நடமாடுவதால் அதிகமான விபத்துக்களில் பல உயிர்களை இழக்கநேரிடுகின்றது.

எனவே உரிய அதிகாரிகள் இவ்விடயம் பற்றி உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக பிரதேச வாசிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.