சிபிஐ முன்னாள் இயக்குனர் ரஞ்சித் சின்ஹா காலமானார்

207 0

சிபிஐ முன்னாள் இயக்குனர் ரஞ்சித் சின்ஹா கொரோனா பாதிப்பினால் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சிபிஐ முன்னாள் இயக்குனர் ரஞ்சித் சின்ஹா காலமானார். அவருக்கு வயது 68. உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த ரஞ்சித் சின்ஹாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் அவர் உயிரிழந்தார். கொரோனா பாதிப்பினால் அவர் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பீகாரில் 1974ல் பயிற்சி முடித்த ஐபிஎஸ் அதிகாரியான ரஞ்சித் சின்ஹா, சிபிஐ இயக்குனர், இந்தோ திபெத் எல்லை போலீஸ் படை இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார்.
சிபிஐ இயக்குனராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, ரெயில்வே பாதுகாப்பு படையின் தலைவராகவும், பாட்னா மற்றும் டெல்லியில் சிபிஐ உயர் பதவிகளிலும் பணியாற்றி உள்ளார்.