வெலி ஓயாவில் நீராடச்சென்று காணாமல்போன தந்தை – மகனின் சடலங்கள் மீட்பு

228 0

bdyஹப்புத்தளை – ஹல்தமுல்லை – வெலி ஓயாவில் நேற்று நீராடச் சென்ற நிலையில், நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல்போயிருந்த தந்தை மற்றும் மகன் ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஹல்தமுல்லை காவல்நிலைய பொறுப்பதிகாரி, எமது செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்தார்.

52 வயதுடைய தந்தை மற்றும் 14 வயதுடைய மகன் ஆகியோரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

மஹரகம பகுதியைச் சேர்ந்த 4 பேர், நேற்றைய தினம் ஹல்தமுல்லை – வெலி ஓயாவில் நீராடச் சென்றிருந்தனர்.

இதன்போது, அவர்கள் நீரில் இழுத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில், இருவர் நேற்றைய தினம் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருந்தனர்.

இதேநேரம், காணாமல்போயிருந்த தந்தையும், மகனையும் தேடும் பணிகள் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்டதுடன், போதிய வெளிச்சமின்மை காரணமாக பின்னர் அந்தப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.

இந்த நிலையில், இன்று மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளின்போது, முற்பகல் 10 மணியளவில் அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது