தாஜூதீன் கொலை வழக்கு – சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

325 0

waseem-thajudeenகொலை செய்யப்பட்ட முன்னாள் ரக்பி வீரர் வாஸிம் தாஜூதீன் வழக்கின் சந்தேகநபர்கள் என கருதி தடுத்துவைக்கப்பட்டுள்ள இரண்டு முன்னாள் காவல்துறை அதிகாரிகளின் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பின் முன்னாள் பிரதி காவல்துறைமா அதிபர் அநுர சேனாநாயக்க மற்றும் நாரஹன்பிட்டிய காவல்துறை நிலைய முன்னாள் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி சுமித் ச்சம்பிக்க பெரேரா ஆகியோரின் விளக்கமறியல் காலமே நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 20ஆம் திகதி வரை இந்த விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதிமன்றம் இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.

தொடர் விசாரணைகளின் நிமித்தமே இந்த விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்;டுள்ளது. இதற்கிடையில் வாஸிம் தாஜூதீனின் கொலை தொடர்பில் மற்றும் ஒரு முதன்மை காவல்துறை அதிகாரி ஒருவரை விசாரணை செய்யவேண்டியுள்ளதாக குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ரணவீரவையே தாம் விசாரணை செய்யவேண்டியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.