யாழ்ப்பாணத்தில் நேற்று 25பேருக்கு கொவிட்-19 தொற்று

286 0

யாழ். மாவட்டத்தில் புத்தாண்டு தினமான நேற்று 25 பேர் அடங்கலாக வடக்கு மாகாணத்தில் 27 பேர் கொவிட்-19 தொற்றாளர்களாக இனங் காணப்பட்டனர்.

யாழ். போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூட அறிக்கையின்படி,நேற்றைய தினம் 145 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 21 தொற்றாளர்களும், வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவரும், கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவு, சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தலா ஒருவரும் என 25 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

இதேபோன்று, முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று இருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் வடக்கில் நேற்று மட்டும் 27 பேர் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.