இலங்கையில்மேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

168 0

இலங்கையில் மேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதனை அடுத்து கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 95 ஆயிரத்து 719 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதியில் தொற்றில் இருந்து மேலும் 225 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 92 ஆயிரத்து 151 ஆக உயர்ந்துள்ளது.