வருட இறுதிக்குள் மாகாணசபை தேர்தல்- நாமல்

317 0

அரசாங்கம் இந்த வருட இறுதிக்குள் மாகாணசபை தேர்தல்களை நடத்தும் நோக்கத்துடன் உள்ளது என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்துவதற்கு அவசியமான திருத்தங்கள் அதனை நடத்துவதற்கான நடவடிக்கைகளிற்கு நான் ஆதரவை வழங்குவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கட்சி தலைவர்களின் சந்திப்பில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களை முன்னெடுக்க எண்ணியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சியினர் மாகணசபை தேர்தல் முறை குறித்து ஏதாவது எதிர்ப்பினை வெளியிட்டால் அவர்கள் அதற்கான மாற்றுவழிகளை முன்வைக்கவேண்டும் எனவும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.