மே தின நிகழ்வுகளை தனியாக நடத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானம்

212 0

மே தின நிகழ்வுகளை தனியாக நடத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியின் சிரேஸ்ட பிரதிதலைவர் உபுல்ரோகண பியதாச இதனை தெரிவித்துள்ளார்.

கட்சியின் தொழிற்சங்கங்கள் மேதின நிகழ்வுகளை தனியாக முன்னெடுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனையவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னர் இறுதிமுடிவை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எஸ்டபில்யூஆர்டி பண்டாரநாயக்க அரசாங்கமே 1956 இல் மே தினத்தை பொது விடுமுறையாக அறிவித்தது என அவர் தெரிவித்துள்ளார்.