எஹலியகொடை, பதுவத்தை பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 19 வயது இளைஞன் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கட்டிட நிர்மானப்பணியில் ஈடுபட்டிருந்த இருவரே இவ்வாறு மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கட்டிட நிர்மானத்துக்காக கொண்டுவரப்பட்ட கொங்கிறீட் கலவை இயந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த உயிரிழந்த இளைஞனின் சடலம் எஹலியகொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் எஹலியகொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.