யாழ்.கல்லுண்டாய் பகுதியில் இளைஞனை வழிமறித்த கும்பல் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
குறித்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.
யாழ்.நகரப்பகுதியில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றும் குறித்த இளைஞன் கடமை முடித்து கல்லுண்டாய் வீதி ஊடாக சென்று கொண்டிருக்கும் போது இனந்தெரியாத நபர்கள் வழிமறித்துத் தாக்கியுள்ளனர்.
சம்பவத்தை அறிந்து தாக்குதலுக்கு இலக்கான இளைஞனின் நண்பன் அராலியில் இருந்து வருகைதந்த நிலையில் அவரை அராலி பாலத்தடியில் வழிமறித்த இனந்தெரியாத கும்பல் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர்.
சம்பவத்தால் குறித்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு, மானிப்பாய்ப் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, வழமையாக இந்தப் பகுதியில் இவ்வாறான தாக்குதல் நடவடிக்கைகள் தொடராக நடைபெற்றுவருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

