நுவரகல பிரதேசத்தில் உடலில் விஷமேறியதால் ஆறு வயது மகனும் தாயும் உயிரிழப்பு

327 0

பொலன்னறுவை – பிஹிடிவெவ – நுவரகல பிரதேசத்தில் உடலில் விஷமேறியமையினால் இருவர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

6 வயதுடைய மகனும் 28 வயதுடைய தாயுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவருடைய மூன்று வயது மகனின் உடலிலும் விஷமேறியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தற்கொலையா? அல்லது கொலையா? என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.