இலங்கையில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு!

302 0

இலங்கையில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளது.

கொழும்பு 14, ஹோமாகம, இகிரிய மற்றும் புவக்பிட்டிய ஆகிய பகுதிகளில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.

86 வயதுடைய பெண் மற்றும் 67,87, 90 ஆகிய வயதுகளையுடைய ஆண்கள் மூவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 575ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 128 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 89 ஆயிரத்து 701 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 2 ஆயிரத்து 856 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேநேரம், கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் 326 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.