வவுனியாவில் போதை பொருட்களுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதுபற்றி தெரிய வருவதாவது,
வவுனியா பொலிஸாரின் விசேட நடவடிக்கையின் போது வவுனியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு இவர்களிடம் இருந்து ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருட்கள் மீட்கப்பட்டன.
இதில் வைரவ புளியங்குளம் பகுதி மற்றும் சிவபுரத்தை சேர்ந்த இருவர்களிடம் இருந்து 620 மில்லிக்கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மற்றைய மூவரிடம் இருந்து 04 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இத் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

