நல்லாட்சி மூலமே தமிழருக்கான அரசியல் தீர்வைப் பெற முடியும்-ஸ்ரீதரன்

299 0

new-card-still001புதிய அரசியல் யாப்பு மூலம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை நல்லாட்சி அரசாங்கத்தின் மூலமே பெற்றுக் கொள்ள முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

மக்கள் நலன் பேணும் அமைப்பின் நான்காம் ஆண்டு நிறைவு நிகழ்வும், உதவித்திட்டம் வழங்கும் நிகழ்விலும் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு, வடக்கு, கிழக்கு ஒன்றிணைந்த வகையில் மக்களின் இறைமைகள் சரியாக பாதுகாக்கும் சமஷ்டி முறையிலான தீர்வினை அரசாங்கம் இக் காலப்பகுதியில் முன்வைக்க வேண்டும் என்றும் இதன்போது கேட்டுக்கொண்டார்.மக்கள் நலன் பேணும் அமைப்பின் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 40 பாடசாலை மாணவர்களுக்கு மாதாந்த உதவிப்பணமும், 50 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வணிகத்துறைத் தலைவர்  நா.சிவநேசன், இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன், கௌரவ விருந்தினராக ஓய்வு பெற்ற அதிபர் ஆர்.குலசிங்கம், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.