வேட்பாளர்கள் பட்டியலில் தனது பெயரை கடைசியாக அறிவித்த முக ஸ்டாலின்- திமுகவினர் நெகிழ்ச்சி

452 0

தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். தனது பெயரை முதலில் அறிவிப்பார் என்று தொண்டர்கள் கருதிய நிலையில் அவரது பெயரை கடைசியாக அறிவித்ததால் தி.மு.க.வினர் நெகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகள் பட்டியலில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி முதல் தொகுதியாகவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி தொகுதி கடைசி தொகுதியாகவும் உள்ளது. எனவே தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிடும்போது, இந்த வரிசையில்தான் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கட்சியின் தலைவர் என்ற முறையில் மு.க.ஸ்டாலின் தனது பெயரைதான் முதலில் அறிவிப்பார் என்று நிர்வாகிகளும், தொண்டர்களும் கருதினர். ஆனால் மு.க.ஸ்டாலின் தனது பெயரை கடைசியாக அறிவித்தார். அப்போது மு.க.ஸ்டாலின் ஆகிய நான் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறேன் என்று கூறினார்.
தி.மு.க.வின் தலைவராக இருந்தும் தனது பெயரை கடைசியாக அறிவித்த மு.க.ஸ்டாலினின் பெருந்தன்மையை கண்டு தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் நெகிழ்ச்சி அடைந்தனர். கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் மு.க.ஸ்டாலினுக்கு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். அதேபோன்று வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.