அமீரகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 9 பேர் பலி

280 0

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகளில் 2,250 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 39 ஆயிரத்து 525 டிபிஐ மற்றும் பிசிஆர் பரிசோதனை முடிவுகளில் 2 ஆயிரத்து 250 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 22 ஆயிரத்து 246 ஆக உயர்ந்துள்ளது.

இதில் நேற்று மட்டும் ஆயிரத்து 736 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் தற்போது குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து ஆயிரத்து 539 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 9 பேர் பலியானார்கள். இதனால் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 1,378 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 19 ஆயிரத்து 329 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கொரோனா பாதிப்படைந்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.