30 ஆண்டுகளின் பின்னர் சிவராத்திரி விழா

302 0

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கோணமடு பிள்ளையார் கோவிலில், 30 ஆண்டுகளுக்குப் பின்னர், இன்று (11) காலை சிவராத்திரி வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

1990ஆம் ஆண்டுக்குப் பின்னர், ஸ்ரீ கோணமடு பிள்ளையார் கோவில் புனர்நிர்மானம் செய்யப்பட்டு, இம்முறையே சிவராத்திரி வழிபாடுகள் சிறப்புற நடைபெற்றுள்ளன.

இதன்போது, முள்ளியவளை, தண்ணீருற்று, குமுழமுனை கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பலர் வழிபாடுகளில் கலந்கொண்டனர்.

அத்துடன், அப்பகுதியில் பொலிஸாரும் படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதாக, மக்கள் தெரிவித்தனர்.