திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளுடன் சிறப்பாக இடம் பெற்றது மகா சிவராத்திரி!

329 0

வரலாற்று சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி நிகழ்வு நேற்று(வியாழக்கிழமை) இடம் பெற்றிருந்த நிலையில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து செல்லும் நிலையில் சுகாதார நடை முறைகளுக்கு அமைவாக மஹா சிவராத்திரி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

பொலிஸார், இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புகளுக்கு மத்தியில் கடுமையான சுகாதார நடை முறைகளுடன் சிவராத்திரி நிகழ்வுகள் இடம் பெற்றிருந்ததுடன், ஆறு ஜாம பூஜைகளும் இடம் பெற்றிருந்தன.

அதே நேரத்தில் இராணுவம் பொலிஸ் மற்றும் விசேட அதிரடி படையினரின் கண்கானிப்பின் கீழ் மஹா சிவராத்திரி பூஜைகள் இடம் பெற்றன.

பாலாவி தீர்த்த கரையில் நீராடுவதும் தீர்த்தம் எடுத்து செல்வதும் பாதுகாப்பு காரணங்களால் தடை செய்யப்பட்டிருந்தன.

சிவராத்திரி நிகழ்வுகளை முன்னிட்டு திருக்கேதீஸ்வர திருப்பணி சபையின் ஏற்பாட்டில் பல்வேறுபட்ட இந்து கலாச்சார நிகழ்வுகள் அறநெறி சொற்பொழிவு நிகழ்வுகளும் இடம் பெற்றன.

சுகாதார துறையினர் கொரோனா தொடர்பில் சுகாதார நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.