நண்பனுக்காக பரீட்சை எழுத முற்பட்ட இளைஞன் கைது

328 0

பலங்கொட பகுதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சையின் பரீட்ச்சார்த்தி ஒருவருக்கு பதிலாக பரீட்சை எழுத முற்பட்ட வேறு ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரஷ்ய மொழி பரீட்சையில் நண்பருக்காக முன்னின்றமை தொடர்பில் இவ்வாறு 21 வயதுடைய இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் இது போன்று பரீட்சை எழுத முற்பட்ட நால்வர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.