குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அசோக் அபேசிங்கவிற்கு அறிவிப்பு!

170 0

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து வௌியிட்ட கருத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காகவே இன்று(செவ்வாய்கிழமை) முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் தற்கொலை குண்டுதாரிகளுக்கு நிதி கிடைத்த விதம் குறித்து அசோக் அபேசிங்க அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

அந்த கருத்து தொடர்பில் விசாரணையை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேரால் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.