யாழ்ப்பாணத்தில் இன்று மட்டும் 22 பேருக்கு கொரோனா

229 0

யாழ்ப்பாணத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது.

இவர்களில் 8 பேர் இ.போ.ச. காரைநகர் சாலையில் பணியாற்றும் சாரதிகள், நடத்துநர்கள், காப்பாளர்கள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 387 பேரின் மாதிரிகள் இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று 382 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இவர்களில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.