ஒன்றிணைந்து போராட வேண்டும் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்-வவுனியாவில் தொடர் போராட்டம்

258 0

மக்கான தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு அனைத்து தாய்மார்களும் ஒன்றினைந்து போராடவேண்டிய தேவை ஏற்ப்பட்டுள்ளதாக வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொண்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

சர்வதேசமகளீர் தினத்தினை முன்னிட்டு வவுனியாவில் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”இன்று சர்வதேச பெண்கள் நாள். பல தாராளவாத விழுமியங்களையும் பெண்கள் தலைமையையும் இந்த உலகத்திற்கு கொண்டுவர கடுமையாக உழைத்த பெண்களுக்கு நாங்கள் மரியாதை செலுத்த விரும்புகிறோம்.

எமது தாய்மார்களின் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றுடன் 1480 ஆவது நாளை கடக்கின்றது.அது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தங்கள் இலக்கை அடைவதற்கான மன வலிமையையும், உறுதிப்பாட்டுடனான, தன்னம்பிக்கை இருப்பதையும்காட்டுகிறது, உலக வரலாற்றில், வவுனியாவில் உள்ள இந்த தமிழ் தாய்மார்கள் 4 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்த போராட்டம் உலகசாதனையை படைத்து வருகின்றது. அவர்களின் போராட்டத்தில் அவர்கள் பெற்ற வலிமைக்கும் , அவர்களின் அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிப்பதற்கும் நாங்கள் அவர்களை ஆசீர்வதிக்க விரும்புகிறோம்.

இந்த நாளில், இந்த உலகில், தலைமைப் பாத்திரத்தை வகித்த மற்ற பெண்களைக் குறிப்பிட விரும்புகிறோம். அந்தவகையில் முதலில் கமலா ஹாரிஸைக் குறிப்பிட விரும்புகிறோம். அவர் வரலாற்றில் அமெரிக்காவின் முதல் பெண் துணைத் தலைவர் ஆவார். அவர் ஒரு தமிழ் தாயின் மகள்.

இரண்டாவதாக, தமிழகத்தின் முதல் பெண் முதல்வரான ஜெயலலிதாவுக்கு வணக்கம் செலுத்த விரும்புகிறோம். பதவியில் இருக்கும் போது ஈழத்தமிழருக்கு ஆதரவளித்த வெளிநாட்டுத் தலைவர் அவர். தமிழர்களுக்கான வாக்கெடுப்பினை கோரியதும் இவர் தான். ஈழத் தமிழர்களை ஆதரிப்பதற்காக தமிழக சட்டசபையில் அவர் ஆற்றிய உரை மறக்கமுடியாதது, தமிழர்கள் நாங்கள் ஒருபோதும் அவரது பேச்சை மறக்க மாட்டோம்.

அடக்குமுறைகளை எவ்வாறு அம்பலப்படுத்துவது என்று எங்களுக்கு வழிகாட்டிய பூபதி அம்மாவின் தலைமையையும் நாங்கள் தலை வணங்குகிறோம்.

ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க வெளியுறவு செயலாளராகவும் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டதன் மூலம் பெண்கள் பல விஷயங்களை சாதிக்க முடியும் என்பதை உலகுக்கு காட்டினார். அவர் தமிழர்களைப் பற்றி மிகவும் அக்கறை கொண்டிருந்தார்.

இலங்கையிலும் உலகின் பிற பகுதிகளிலும் இரக்கமற்ற போரை அம்பலப்படுத்த கடுமையாக உழைத்த பிரபல சர்வதேச செய்தி நிருபரே மேரி கொல்வின். இலங்கை இராணுவத்தால் கொல்வினின் ஒரு கண்ணில் பார்வை பறி போனது என்பதை நாம் நினைவூட்ட விரும்புகிறோம்.

அத்துடன் ஐநாவின் இரண்டாவது வரைவு நல்லதல்ல என்பதைக் குறிப்பிட விரும்புகிறோம். இது வாக்கெடுப்பு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் ஐ.நா அமைதிகாக்கும் படை ஆகியவற்றை சேர்க்கத் தவறிவிட்டது.

அத்துடன் எமக்கான தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு அனைத்து தாய்மார்களும் ஒன்றினைந்து போராடவேண்டிய தேவை தற்போது ஏற்ப்பட்டுள்ளது.,காணாமல்ஆக்கப்பட்ட தமிழர்கள் மற்றும் ஏனைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவின் உதவி தேவை” என்றனர்.