எமது நிலைப்பாடு குறித்து சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் தெளிவாகப் பேசிவிட்டோம்

456 0

mavai-senathirajah-tna-600எமது நிலைப்பாடு குறித்து சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் தெளிவாகப் பேசிவிட்டோம். கட்சியின் தலைவரல்லாத வேறு எவருக்கும் நாங்கள் பதில்சொல்லவேண்டிய தேவையில்லையென தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

சமஷ்டித் தீர்வுப் பண்புகளை ஒற்றையாட்சிக்குள்ளே பெறுவதைப்பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிந்திக்கவேண்டுமெனவும், சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லையெனவும் அண்மையில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் டிலான்பெரேரோ தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,சமஷ்டி முறை­யி­லான அர­சியல் தீர்வு, வட­கி­ழக்கு இணைப்பு என்ற விவ­கா­ரங்கள் தொடர்பில் சுதந்­திரக் கட்­சியின் தலைவரான மைத்­தி­ரி­பால சிறி­சேன அவர்­க­ளி­டமும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வ­ரான பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க அவர்­க­ளிடம் எமது உறு­தி­யான நிலைப்­பாட்டை தெளி­வா­கவும் விரி­வா­கவும் எடுத்துக் கூறி­யுள்ளோம். எமது உறு­தி­யான நிலைப்­பாடு பற்றி அவர்கள் தெரிந்து கொண்­டுள்­ளனர். ஒவ்­வொ­ரு­வ­ரு­டைய அபிப்­பி­ரா­யங்­க­ளுக்கும் பதில் சொல்ல வேண்­டிய தேவை கூட்­ட­மைப்­புக்கு இல்லை.

கட்­சியின் தலை­வர்கள் அல்­லா­த­வர்கள் எதையும் கூறிக்­கொண்­டி­ருக்­கட்டும். அவற்­றுக்கு பதில் அளிக்க வேண்­டிய தேவை எமக்­கில்லை. கூட்டமைப்பினராகிய நாம் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் எவ­ரி­டமும் 13 ஆவது ­தி­ருத்தம் பற்றி கதைக்­க­வே­யில்லை. சமஷ்டி, இணைப்பு என்ற விவ­கா­ரங்­களில் உறுதி கொண்­ட­வர்­க­ளாக நாம் உள்ளோம் என்­பதை பல்­வேறு சந்­திப்பின் போதும் ஊட­கங்­களின் வாயி­லா­கவும் வெளிப்­ப­டுத்­தி­யுள்ளோம்.
ஐ.தே.கட்­சியின் தலை­மைப்­பீடம் மற்றும் சுதந்­திரக் கட்­சியின் தலை­மைப்­பீடம் என எல்­லோ­ரி­டமும் எமது நிலைப்­பாட்டை தெளி­வு­படச் சொல்­லி­யுள்ளோம். எந்­த­வொரு பேச்­சு­வார்த்­தையின் போதும் கூட்­ட­மைப்பு 13 ஆவது திருத்தம் பற்றி உரை­யா­ட­வே­யில்லை. சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான அதி­காரப் பகிர்­வையும் வட­கி­ழக்கு இணைந்த பிர­தே­சத்தில் முஸ்லிம் மக்­களும் அதிகாரங்கள் வழங்குவது தொடர்பில் உடன்­பாட்­டுக்கு வர­வேண்டும்.
தன்­னாட்­சி­யொன்றின் மூலம் அதி­காரப் பகிர்வை பெற்­றுக்­கொள்ள வேண்டும் என்­பதில் நாம் உறு­தி­யா­க­வுள்ளோம்.
ஒற்­றை­யாட்சி மூலம் சமஷ்டி பண்புகளை பெற முடியாது. அதனை நாம் ஏற்றுக்கொள்ள தயாராகவுமில்லை. அரசியல் யாப்பு சபையின் வழிநடத்தல் குழுவின் அறிக்கையானது பாராளுமன்றத்துக்கு கொண்டு வரப்படும் பொழுது இதுபற்றி நாம் தெளிவாக முறையாக உரையாடவுள்ளோம் என்றார்.