சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை அரசை நிறுத்த கோரி – கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்! (படங்கள்)

220 0

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை அரசை நிறுத்த கோரி  இன்றைய தினம் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்  கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி கந்தசாமி ஆலயம் முன்பாக ஆரம்பமாகியிருந்தது வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் பணிப்பாளர் பத்மநாதன் கருணாநிதி தலைமையில் இடம்பெற்ற குறித்த போராட்டமானது பல்வேறு சிபில் அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த போராட்டத்தின் போது சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கை அரசை நிறுத்த கோரி கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் சர்வதேச நாடுகள் அந்த பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

போராட்டத்தின் பின் சிபில் அமைப்புக்களினால் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மகஜரும் வாசிக்கப்பட்டது