யாழ்.நகரில் நெடுந்தூர போக்குவரத்தில் இறுக்கமான நடைமுறை- யாழ். மாநகர முதல்வர்

217 0

யாழ்ப்பாண நகர பகுதியில் ; எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நெடுந்தூர போக்குவரத்தில் இறுக்கமான நடைமுறை பின்பற்றப்படும் என யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

வெளிமாவட்டங்களில் இருந்து வந்து செல்லும் பஸ்கள் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியால் உள் நுழைவது மற்றும் வெளிச்செல்வது மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வி.மணிவண்ணன், நடைமுறைகளை மீறுவோர் மீது பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுவார்கள். அத்தோடு வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நெடுந்துர பஸ் நிலையத்திற்கு சென்று தமது பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.