கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 04 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 457 ஆக உயர்ந்துள்ளது.
01 . பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 68 வயதான பெண் ஒருவர், கொத்தலாவ பாதுகாப்புக் கல்லூரி வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கொரோனா தொற் றாளர் என அடையாளம் காணப் பட்டதை அடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொ ரோனா தொற்று, இரத்தம் விஷமானமையால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் சிறுநீரக நோய் காரணமாக 2021 பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
02. கல்கிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 69 வயதான பெண் ஒருவர் கொழும்பு தெற்கு போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது கொ ரோனா தொற்று மற்றும் நீரிழிவு நோய் காரணமாக 2021 பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
03.கொட்டுகொட பகுதியைச் சேர்ந்த 55 வயதான ஆண் ஒருவர் வட கொழும்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் , கொ ரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக 2021 பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
04.வத்தளை பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஆண் ஒருவர் வெலிசறை மார்புச் சிகிச்சை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் , கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து வட கொழும்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொ ரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் இதய நோய் காரணமாக 2021 பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 457 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

