கொரோனா தொற்றுநோய் காரணமாக நாடு திரும்ப முடியாதிருந்த 207 இலங்கையர்கள் இன்று (23) காலை நாட்டை வந்தடைந்தனர்.
வேலைவாய்ப்புக்காக கட்டார் சென்று முதலாளிகளால் துன்புறுத்தப்பட்ட இலங்கையின் ஒரு குழுவினரே தோஹாவிலிருந்து விஷேட இலங்கை எயார்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விமானத்தில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் வீட்டுப் பணிப்பெண்களாகச் கத்தார் சென்ற இலங்கைப் பெண்களாவர்.
இந்த குழுவினர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக இலங்கை இராணுவத்தால் அரசாங்க மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.