வவுனியா – ஓமந்தையில் வல்லப்பட்டையுடன் 25 வயது இளைஞன் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டார்.
கிளிநொச்சியிலிருந்து வவுனியா சென்ற தனியார் பேருந்தில், வவுனியா – புளியங்குளம் விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, இந்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இளைஞன் ஓமந்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த இளைஞனிடமிருந்து 700 கிராம் வல்லப்பட்டை மீட்கப்பட்டது எனத் தெரிவித்த, ஓமந்தை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.