பிப்.25 முதல் காங்கிரசில் விருப்பமனு வினியோகம்- கே.எஸ்.அழகிரி

185 0

தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 25ந்தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூறியிருப்பதாவது:

* தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 25ந்தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம்.

* சென்னை சத்தியமூர்த்தி பவனில் பிப்.25 முதல் மார்ச் 5ந்தேதி வரை விருப்ப மனுக்கள் வினியோகிக்கப்படும்.

* பொது தொகுதிகளுக்கு ரூ.5 ஆயிரம், தனி தொகுதிகளுக்கு ரூ.2500 விருப்ப மனு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* அனைத்து தொகுதிகளிலும் பெண்களுக்கு ரூ.2500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* விருப்பமனு விண்ணப்ப படிவங்கள் மார்ச் 5ந்தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.