ஹம்பாந்தோட்டை விடயம் – சம்பந்தன் கருத்து

273 0

sampantharஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஊழியர்கள் நடத்திவரும் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தால் அதனை வன்மையாக கண்டிக்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்தப் போராட்டத்தை மையமாகக்கொண்டு தாக்குதல்கள் நடத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி ஹம்பாந்தோட்டை அல்லது வேறும் பகுதியில் இடம்பெறும் இவ்வாறான சம்பவங்களை பார்த்து தான் மௌனம் காக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

போராட்டங்களின் போது தாக்குதல் நடத்தப்படுவதனை ஏற்க முடியாது என அவர் கூறியுள்ளார்.