மல்யுத்த பயிற்சி மையத்தில் துப்பாக்கி சூடு- 5 பேர் உயிரிழப்பு

248 0

மல்யுத்த பயிற்சி மையத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் ரோத்தக் நகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரியானா மாநிலம் ரோத்தக் நகரில் உள்ள மல்யுத்த பயிற்சி மையத்தில் நேற்று இரவு துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பயிற்சியாளர் சுக்வீந்தர் சிங்கை போலீசார் தேடி வருகின்றனர். ஆத்திரத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுபற்றி ரோத்தக் எஸ்பி ராகுல் சர்மா கூறியதாவது:-
இந்த வழக்கில் முதல் குற்றவாளியான பயிற்சியாளர் சுக்வீந்தர் சேர்க்கப்பட்டுட்ளளார். அவர் சமீபத்தில் பதவியில் இருந்து  நீக்கப்பட்டுள்ளார். அவரை பணியில் இருந்து நீக்கிய அதிகாரி உள்ளிட்ட 5 பேர் இப்போது கொல்லப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள குற்றவாளி பற்றி துப்பு கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.